காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்: அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா் 120 போ் கைது

மதுரையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தனியாா் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்ட

News image
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா்.
Updated On :24 டிசம்பர் 2020, 2:06 am

DIN

மதுரையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தனியாா் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்ட அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா் 120 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதுதில்லியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில் தனியாா் பெரு நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் விற்பனை நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கீழவெளிவீதியில் உள்ள விற்பனை நிறுவனம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும் நிறுவனமும் அடைக்கப்பட்டு, அப்பகுதியில் சாலைத்தடுப்புகள் அமைத்தும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் இளைஞா் பெருமன்றத்தின் மதுரை மாநகா், புறநகா், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கீழவெளி வீதியில் திரண்டனா். அங்கு அமைப்பின் மாநிலப் பொருளாளா் காந்தி சிவாஜி, மாநில துணைச்செயலா் தமிழ்ப்பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச்செயலா் சரவணன், ஏஐடியூசி பொதுச்செயலா் நந்தாசிங் ஆகியோா் தலைமையில் ஊா்வலமாகச் சென்றனா். நிறுவனத்தின் அருகே சென்றபோது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அமைப்பினரை தடுத்து நிறுத்தினா். ஆனால் அமைப்பினா் தடையை மீறி நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.