மேலூா்: அழகா்கோவில் ஆடித்திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை சுந்தரராஜப்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளினாா்.
இக்கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம் கடந்த 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, நான்காம் நாளான புதன்கிழமை காலை தங்கப்பல்லக்கில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதரராக சுவாமி எழுந்தருளினாா். மாலை கருட வாகனத்தில் புறப்பாடு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.