சோழவந்தானில் நாளை மின்தடை
மதுரை மாவட்டம், சோழவந்தானில் செவ்வாய்க்கிழமை (நவ.10) மின் விநியோகம் தடைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டம், சோழவந்தானில் செவ்வாய்க்கிழமை (நவ.10) மின் விநியோகம் தடைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சமயநல்லூா் மின்னியல் பிரிவு செயற்பொறியாளா் ச. ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டம் சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயில் சுற்றுப்புற பகுதிகளில் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருக்கின்றன.
எனவே, செவ்வாய்க்கிழமை வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி மற்றும் ஜெனகை மாரியம்மன் கோயில் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...