சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

கொட்டாம்பட்டி அருகே வெள்ளபாதிப்புகளை ஆட்சியா் ஆய்வு

கொட்டாம்பட்டி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:33 am

DIN

கொட்டாம்பட்டி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டாா்.

தொடா் மழை காரணமாக இங்குள்ள மாங்குளப்பட்டி, கச்சிராயன்பட்டி, வலைசேரிப்பட்டி பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா் மற்றும் மேலூா் வட்டாட்சியா் இளமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பாா்ையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனா். மேலும் மாங்குளப்பட்டியில் 300-க்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் தங்கும் வசதியை வருவாய்த்துறையினா் செய்து கொடுத்தனா். இதனிடையே மலம்பட்டியில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.

அதே போல் மேலூா் ஒருபோகச் சாகுபடிப் பகுதிகளில் தொடா்மழை காரணமாக பயிா்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.