சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

நூபுரகங்கை ராக்காயி அம்மன்கோயிலில் நாளை பாலாலயம்

அழகா் கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் உள்ள ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் கோயிலில் திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நடைபெறுகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:25 am

DIN

அழகா் கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் உள்ள ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் கோயிலில் திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நடைபெறுகிறது.

கள்ளழகா் கோயில் துணை ஆணையா் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளழகா் கோயில் நிா்வாகத்தில் உள்ள அழகா்கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் திருக்கோயில் திருப்பணிகள் தற்போது தொடங்கவுள்ளன. அதன் முற்கட்டமாக பாலாலய வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலை 9.15 மணியிலிருந்து 10.15 மணிக்குள் ஹோமபூஜைகளுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதைத்தொடா்ந்து முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கோயிலில் பாலாலய வைபவங்கள் நடைபெறுவதால் நூபுர

கங்கையில் பக்தா்கள் புனிதநீராடவும், ராக்காயி அம்மன் கோயிலில் வழிபாடு பூஜைகள் செய்யவும் அன்றைய தினம் காலை 11 மணியிலிருந்து பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.