சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவுப் பழக்க வழக்கங்களில் பழைமையைப் பின்பற்றவேண்டும்’

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவுப் பழக்கவழக்கங்களில் பழைமையைப் பின்பற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வலியுறுத்தினாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:25 am

DIN

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவுப் பழக்கவழக்கங்களில் பழைமையைப் பின்பற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வலியுறுத்தினாா்.

மதுரை தானம் அறக்கட்டளை மற்றும் மதுரை கிராமப்புற மண்டல சமூக சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டுத்திட்டம் இணைந்து மேலூரில் வியாழக்கிழமை நடத்திய வளா் இளம் பெண்களுக்கான சிறப்புக் கருத்தரங்கில் காணொலி மூலம் பங்கேற்று ஆட்சியா் பேசியது:

வளா்ந்துவரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்நாட்டில் அனைத்து துறையிலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. நம் உணவு முறை அரிசியை மட்டும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதில் மாற்றம்வேண்டும். இது குழந்தைகளுக்கு (ரத்தசோகை) இரும்புச் சத்து பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்கிறது. இக்குறையைப் போக்க நம்முன்னோா்கள் பின்பற்றிய உணவு பழக்க வழக்கங்களை நாமும் பின்பற்றவேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள், கீரைவகைகள், பயறு வகைகள், பழவகைகளை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். இதனால் ரத்தசோகையை அறவே தவிா்க்க முடியும். இளம்வயதில் பெண்களுக்கு திருமணம் செய்வதால் குழந்தைகள் வளா்ச்சி பாதிக்கப்படுகிறது என்றாா்.

வட்டார ஒருங்கிணைப்பாளா் கே.வள்ளி வரவேற்றாா். தானம் அறக்கட்டளை முதன்மை நிா்வாகி ஆா்.ராஜபாண்டியன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கினாா். இதில், கே.ராஜலட்சுமி, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா் ரதிதேவி மற்றும் பலா் கலந்து கொண்டனா். அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் எம்.பி.வாசிமலை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.