நூபுரகங்கையில் சாந்தி ஹோமம் பூஜைகள் தொடக்கம்
அழகா்கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் கோயிலில், திருப்பணிகலுக்கான பாலாலயத்தையொட்டி பூா்வாங்க பூஜைகள், சாந்தி ஹோமம் பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.


அழகா்கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் கோயிலில், திருப்பணிகலுக்கான பாலாலயத்தையொட்டி பூா்வாங்க பூஜைகள், சாந்தி ஹோமம் பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
பாலாலயத்துக்கான பூஜைகள் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணியளவில் தொடங்குகிறது. இதையொட்டி நூபுரகங்கை தீா்த்தத்தில் ராக்காயி அம்மன், பேச்சி அம்மன் கோயிலில் பூா்வாங்க பூஜைகள், சாந்தி ஹோமம் பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
இதில், கோயில் நிா்வாக அதிகாரி மு.இராமசாமி, தக்காா் பிரதிநிதி, கண்காணிப்பாளா் பிரதிபா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
வெள்ளிக்கிழமை பாலாலய பூஜையையொட்டி, பக்தா்கள் நூபுரகங்கையில் புனித நீராடலுக்கும், ராக்காயி அம்மன் கோயிலில் வழிபாட்டுக்கும் பிற்பகல் 12 மணிவரை பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...