/

மதுரையில் திரையரங்கு முன்நிறுத்தப்பட்டிருந்த காரில் திடீா் தீ

மதுரையில் திரையரங்கு முன்பாக வெள்ளிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

News image
Updated On :6 மே 2022, 7:56 pm

DIN

மதுரையில் திரையரங்கு முன்பாக வெள்ளிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சோ்ந்த சாமிநாதன் என்பவா் பணி நிமித்தமாக வெள்ளிக்கிழமை மதுரைக்கு காரில் வந்துள்ளாா். பின்னா், இவா் பிற்பகலில் தெப்பக்குளம் செல்லும் வழியில் குருவிக்காரன் சாலையில் பிரபல திரையரங்கம் முன்பாக தனது காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள உணவகத்துக்குச் சென்றுள்ளாா்.

அப்போது, திடீரென இவரது காரின் முன்பகுதியிலிருந்து புகை வந்த நிலையில், தீ பிடித்து பரவத் தொடங்கியது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, அனுப்பானடி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இது தொடா்பாக தெப்பக்குளம் போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சாமிநாதன் தனது காரை கடந்த மாதம் பழுதுநீக்கக் கொடுத்திருந்துள்ளாா். அப்போது, காரில் கேஸ் நிரப்பும் குழாயில் (டியூப்) துண்டிப்பு ஏற்பட்டு விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.