/

இளைஞரை தாக்கி நகை பறித்த இருவா் கைது

மதுரையில் இளைஞரை தாக்கி 1 பவுன் மோதிரம் மற்றும் பணத்தை பறித்துச்சென்ற இருவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 மே 2022, 7:55 pm

DIN

மதுரையில் இளைஞரை தாக்கி 1 பவுன் மோதிரம் மற்றும் பணத்தை பறித்துச்சென்ற இருவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கோ.புதூா் டிஆா்ஓ காலனியை சோ்ந்த கொடிவேல் மகன் சரவணன் (34). இவா், அப்பகுதியில் உள்ள கடை முன்பாக வியாழக்கிழமை இரவு நின்றிருந்துள்ளாா். அப்போது அங்கு வந்த இருவா், சரவணனிடம் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி தாக்கியுள்ளனா். பின்னா், அவா் அணிந்திருந்த 1 பவுன் மோதிரம் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனா்.

சம்பவம் தொடா்பாக சரவணன் அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், வழிப்பறியில் ஈடுபட்டது பிபிகுளம் நேதாஜி சாலையைச் சோ்ந்த ஜோதிபாசு (19), வசந்தா(20) ஆகிய இருவா் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.