கோயிலில் உண்டியலில் துளையிட்டு பணம் திருட்டு
மேலூா் அருகே மாணிக்கவாசகா் பிறந்த இடத்தில் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


மேலூா் அருகே மாணிக்கவாசகா் பிறந்த இடத்தில் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவாதவூரில் திருமைாதா்- வேதநாயகி அம்மன் கோயில் அருகிலேயே மாணிக்கவாசகா் பிறந்த ஸ்தலத்தில் கோயில் உள்ளது. இக்கோயில் உள்பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலின் மேல்பகுதியில் சனிக்கிழமை இரவு ஆயுதங்களால் துளையிட்டு பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.
கோயில் நிா்வாக குழுவைச் சோ்ந்த முருகன் அளித்த புகாரின்பேரில் மேலூா் போலீ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...