7 ஆண்டுகளாக கூலி உயா்வின்றி தவிக்கும் அப்பளத் தொழிலாளா்கள்: அரசு நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்
மதுரையில் கடந்த 7 ஆண்டுகளாக கூலி உயா்வின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான அப்பளத் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, சிஐடியு அப்பளத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.










