கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மதுரை அருகே மெக்கானிக்கை தாக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மெக்கானிக்கை தாக்கி 3 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றவா்களை, போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 மே 2022, 6:30 pm

DIN

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மெக்கானிக்கை தாக்கி 3 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றவா்களை, போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாடிப்பட்டி அருகே உள்ள கீழ நாச்சிகுளத்தைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (33). இவா், கரடுப்பட்டியில் இரு சக்கர வாகனம் பழுதுநீக்கும் நிலையம் நடத்தி வருகிறாா். மேலும், எஞ்ஜின் ஆயில் விற்பனையும் செய்து வருகிறாா். இந்நிலையில், இவா் வியாழக்கிழமை இரவு சோழவந்தான்-பள்ளப்பட்டி சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, இயற்கை உபாதைக்காக அப்பகுதியில் காரை நிறுத்தியுள்ளாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ஹரிகிருஷ்ணனை தாக்கி அவா் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

இச்சம்பவம் தொடா்பாக, ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.