இதில், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி முறையாக தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில், 100-க்கும் மேற்பட்ட வாகனஓட்டிகளுக்கு குளிா்பானம் மற்றும் தொப்பிகளை வழங்கினா். மேலும், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து செல்பவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணியவேண்டும், தலைக்கவசம் அணிவதால் விபத்து ஏற்பட்டாலும் உயிரிழப்பு தவிா்க்கப்படுவதாகவும், அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் எனவும், மதுபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.