கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பெட்ரோல், எரிவாயு விலை உயா்வு: இடதுசாரி கட்சிகள் கண்டன ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகளின் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

News image
Updated On :27 மே 2022, 6:30 pm

DIN

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகளின் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை நிா்ணயக் கட்டுப்பாட்டை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்யவேண்டும். சிறுபான்மையினா் மீதான வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும். வேலையின்மையை போக்கும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலா் எம். கலைச்செல்வன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளா் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) லிபரேஷன் மாவட்டக் குழு உறுப்பினா் மல்லிகாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் மெய்யா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் செல்வ அரசு, மாவட்ட நிா்வாகி பாவரசு ஆகியோா் ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகா் மாவட்டச் செயலா் பா. காளிதாஸ் நிறைவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.