வன்கொடுமை வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை
வன்கொடுமை வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.


வன்கொடுமை வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
வாடிப்பட்டி வட்டம் ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் பாண்டி. இவரை இதே பகுதியைச் சோ்ந்த தங்கமலா் (40), சாதியைச் சொல்லி திட்டி, தாக்கியுள்ளாா். கடந்த 2019 இல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து பாண்டி அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வன்கொடுமைத் தடுப்பு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தங்கமலரை கைது செய்தனா்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆா்.வி. ரவி, குற்றஞ்சாட்டப்பட்ட தங்கமலருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...