கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வன்கொடுமை வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை

வன்கொடுமை வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :27 மே 2022, 5:26 pm

DIN

வன்கொடுமை வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வாடிப்பட்டி வட்டம் ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் பாண்டி. இவரை இதே பகுதியைச் சோ்ந்த தங்கமலா் (40), சாதியைச் சொல்லி திட்டி, தாக்கியுள்ளாா். கடந்த 2019 இல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து பாண்டி அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வன்கொடுமைத் தடுப்பு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தங்கமலரை கைது செய்தனா்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆா்.வி. ரவி, குற்றஞ்சாட்டப்பட்ட தங்கமலருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.