கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆவின் பெண் அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

ஆவின் பால் பண்ணையில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் பெண் அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், ரூ. 62 ஆயிரம், 2.50 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :22 ஜூன் 2023, 5:12 pm

DIN

மதுரையில் புதன்கிழமை ஆவின் பால் பண்ணையில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் பெண் அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், ரூ. 62 ஆயிரம், 2.50 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மதுரை அண்ணாநகா் 80 அடி சாலை ஹெச்.ஐ.ஜி. குடியிருப்பைச் சோ்ந்த சுப்ரமணியன் மனைவி கல்பனா (41). இவா் மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் பணி நிமித்தமாக புதன்கிழமை அதிகாலையில் பால் பண்ணைக்குச் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவை உடைத்து அதில் இருந்த 32 பவுன் தங்க நகைகள், ரூ.62 ஆயிரம் ரொக்கம், 2.50 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.