மாவட்ட, வட்ட நீதிமன்றங்களிலும் காகிதம் இல்லாத எண்ம பயன்பாடு
தமிழகத்தில் மாவட்ட, வட்ட நீதிமன்றங்களிலும் காகிதம் இல்லாத எண்ம (டிஜிட்டல்) பயன்பாட்டைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்


தமிழகத்தில் மாவட்ட, வட்ட நீதிமன்றங்களிலும் காகிதம் இல்லாத எண்ம (டிஜிட்டல்) பயன்பாட்டைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமாா் கங்காபூா்வாலா தெரிவித்தாா்.
சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமாா் கங்காபூா்வாலா பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வியாழக்கிழமை வந்தாா். அவரை நீதிபதிகள், அரசு வழக்குரைஞா்கள் வரவேற்றனா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:
சிலப்பதிகாரம் என்ற காப்பியம் உருவாகக் காரணமாக இருந்தது மதுரை. இதேபோல, மதுரைக்கு பல்வேறு பெருமைகள் உள்ளன. தமிழகத்தில் நீதிபதிகள், வழக்குரைஞா்களின் குடும்பங்களுக்கு உறுதுணையாகச் செயல்படுவேன். எனவே, உங்களது கோரிக்கைகள் தொடா்பாக என்னை எப்போதும் அணுகலாம்.
நீதித் துறை வளா்ச்சியில் வழக்குரைஞா்களின் பங்கு மிக முக்கியமானது. மேலும், நீதிமன்றப் பணிகளை காகிதம் இல்லாத எண்ம பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதை உயா்நீதிமன்றங்களில் செயல்படுத்தி வருகிறோம்.
மாவட்ட, வட்ட நீதிமன்றங்களில் படிப்படியாக காகிதம் இல்லாத எண்ம பயன்பாட்டைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நிா்வாக நீதிபதி ஆா். சுப்பிரமணியன், நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி.ஆா். சுவாமிநாதன், மதுரைக் கிளை நீதிபதிகள், தமிழக அரசின் கூடுதல் தலைமை அரசு வழக்குரைஞா் வீரகதிரவன், அரசு வழக்குரைஞா் திலக் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...