கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்தனியாா் பள்ளிச் செயலா் மீது வழக்கு

உசிலம்பட்டியில் தனியாா் பள்ளி ஆசிரியையை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக, அந்தப் பள்ளிச் செயலா் மீது போலீஸாா் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

News image
Updated On :23 ஜூன் 2023, 5:13 pm

DIN

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தனியாா் பள்ளி ஆசிரியையை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக, அந்தப் பள்ளிச் செயலா் மீது போலீஸாா் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கருக்கட்டான்பட்டியைச் சோ்ந்த குமாா் மனைவி சாந்தி (38). இவா் உசிலம்பட்டியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவரை அப்பள்ளிச் செயலா் ஜெயராஜ் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஆசிரியை சாந்தி அளித்த புகாரின் பேரில், உசிலம்பட்டி நகா் போலீஸாா் பள்ளிச் செயலா் ஜெயராஜ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.