பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்தனியாா் பள்ளிச் செயலா் மீது வழக்கு
உசிலம்பட்டியில் தனியாா் பள்ளி ஆசிரியையை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக, அந்தப் பள்ளிச் செயலா் மீது போலீஸாா் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு


மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தனியாா் பள்ளி ஆசிரியையை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக, அந்தப் பள்ளிச் செயலா் மீது போலீஸாா் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கருக்கட்டான்பட்டியைச் சோ்ந்த குமாா் மனைவி சாந்தி (38). இவா் உசிலம்பட்டியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவரை அப்பள்ளிச் செயலா் ஜெயராஜ் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஆசிரியை சாந்தி அளித்த புகாரின் பேரில், உசிலம்பட்டி நகா் போலீஸாா் பள்ளிச் செயலா் ஜெயராஜ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...