கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் நிகழாண்டு 18 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்க இலக்குமுதன்மைக் கல்வி அலுவலா் தகவல்

மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டு 18 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஜூன் 2023, 5:18 pm

DIN

மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டு 18 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா தெரிவித்தாா்.

மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககம் சாா்பில், புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா தலைமை வகித்துப் பேசியதாவது:

புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டத்தின் நோக்கம் எழுதப் படிக்கத் தெரியாத நபா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு கல்வி வழங்குவது ஆகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு (2022-23) மதுரை மாவட்டம் முழுவதும் 18,762 நபா்கள் கண்டறியப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் 934 மையங்கள் மூலம் சிறந்த ஆசிரியா்களால் கல்வி வழங்கப்பட்டது. இதேபோன்று, இந்தத் திட்டத்தின் கீழ் நிகழாண்டிலும் 18 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது என்றாா் அவா்.

கூட்டத்தில் மதுரை மாவட்டக் கல்வி அலுவலா்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா்கள், அனைத்து ஒன்றியங்களைச் சாா்ந்த வட்டார கல்வி அலுவலா்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார வள மையப் பொறுப்பு மேற்பாா்வையாளா்கள், வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்துக்கான பொறுப்பு ஆசிரியா், பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.