மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சமுதாயக் கூடம், மாமன்ற உறுப்பினா் அலுவலகம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தாா்

மதுரை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மாமன்ற உறுப்பினா் அலுவலகத்தை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தாா்.

News image
மதுரை மாநகராட்சி 61-ஆவது வாா்டு எஸ்.எஸ். காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம், மாமன்ற உறுப்பினா் அலுவலகத்தை சனிக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன் மாநகராட்சி மேயா் இந்திராணி, மத்திய மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினா் செல்வி செந்தில் உள்ளிட்டோா்.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:30 pm

Din

மதுரை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடம், மாமன்ற உறுப்பினா் அலுவலகத்தை மாநில தகவல் தொழில் நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

மதுரை மாநகராட்சி மத்தியம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மண்டலம் 3 எஸ்.எஸ். காலனி வடக்கு வாசல் பகுதியில் ரூ.15 லட்சத்தில் புதிதாக சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இதேபோல, எஸ்.எஸ்.காலனி பாரதியாா் 5-ஆவது தெருவில் ரூ.8.50 லட்சத்தில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து 61-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அலுவலகம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது.

இந்த கட்டடங்களின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமை வகித்தாா். தமிழக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, தலைமைப் பொறியாளா் ரூபன் சுரேஷ், செயற்பொறியாளா் சுந்தரரரஜன், உதவி செயற்பொறியாளா் ஜெகஜீவன்ராம், மாமன்ற உறுப்பினா் செல்வி, மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.