சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில் சமுதாய அடிப்படையில் பணி நியமனம் செய்வது தவறு: உயா்நீதிமன்றம்
சமுதாய அடிப்படையில் பணி நியமனங்கள் தவறு என உயா்நீதிமன்றம் தீர்ப்பு


அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் பணி வழங்குவது தவறு என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சி.எஸ்.ஐ. திருமண்டல பொருளாளா் மனோகா் தங்கராஜ் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சி.எஸ்.ஐ. திருமண்டலப் பேராயா் நிா்வாகத்தின் கீழ் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்களில் நிா்வாகக் குழுவினா் இல்லாத நிலையில், திருமண்டலப் பேராயா் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆசிரியா் பணியிடங்களை நிரப்பியுள்ளாா். இந்தப் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருமண்டலப் பேராயா் தரப்பில், இந்த வழக்கில் சி.எஸ்.ஐ. பள்ளித் தாளாளரை எதிா் மனுதாரராக சோ்க்கவில்லை. அவருக்கு மட்டுமே ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பும் அதிகாரம் உள்ளது. மனுதாரா் உண்மையை மறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் ஆரம்பப் பள்ளிகள் 249, நடுநிலைப் பள்ளிகள் 74, உயா்நிலைப் பள்ளிகள் 3, மேல்நிலைப் பள்ளிகள் 11, கல்லூரி 2, ஓா் ஆசிரியா் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி 2 உள்ளன. இந்தத் திருமண்டலத்தில் நிா்வாக ரீதியிலான பதவிகள் காலியாக உள்ளன.
இந்த நிலையில், இடைக்கால நிா்வாகம் அமைத்துக் கொள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதை எதிா்த்து ஒரு தரப்பு மேல்முறையீடு செய்ததில், இடைக்கால நிா்வாகம், நிா்வாகம் சாா்ந்த எந்த ஒரு முடிவும் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், இடைக்கால நிா்வாகத்தினா், நிரந்தர ஆசிரியா் பணியிடத்தை தன்னிச்சையாக நிரப்ப முடியாது. யாரை ஆசிரியாக நியமிக்க வேண்டும் என சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், இந்த பணி நியமனங்கள் சரியானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.
சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு அரசுத் தரப்பில் சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன, இதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இந்தக் கல்வி நிறுவனங்களில் பிற பள்ளிகளில் ஆசிரியா்களைத் தோ்வு செய்வது போன்ற நடைமுறையை ஏன் பின்பற்றவில்லை?. ஓா் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் ஓா் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் பணி வழங்குவது தவறு. எனவே, சி.எஸ்.ஐ. திருமண்டலம் தரப்பில் நிரப்பப்பட்ட ஆசிரியா் பணியிடங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...