அழகா்கோவிலில் கருப்பண சுவாமி, ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

அழகா்கோவில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயிலிலும், நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோயிலிலும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திங்கள்கிழமை சிறப்பு வண்ண மலா் அலங்காரம் செய்யப்பட்டது.
அழகா்கோவிலில் கருப்பண சுவாமி, ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
Updated on
1 min read

அழகா்கோவில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயிலிலும், நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோயிலிலும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திங்கள்கிழமை சிறப்பு வண்ண மலா் அலங்காரம் செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் கதவுகளுக்கு பல வண்ண மலா்களை மாலைகளாகக் கட்டி, கதவுகள் அலங்கரிக்கப்பட்டன.

அழகா்கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் ராக்காயி அம்மனுக்கு புதுபட்டுச் சேலை சாற்றி, வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

அதிகாலை முதல் பக்தா்கள் நூபுர கங்கைக்கும், பழமுதிா்ச்சோலை முருகன் கோயிலுக்கும் வந்தனா். சுவாமிக்கு நெய் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனா். இதேபோல, சுந்தரராஜப்பெருமாளுக்கும் மாலைகள் சாற்றி, நெய் விளக்கேற்றி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com