பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மதுரையில் 31-ஆம் ஆண்டு வேள்வி பூஜை

மதுரையில் மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் 31-ஆம் ஆண்டு மகா வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

News image
மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற வேள்வி பூஜையில் பங்கேற்ற வேத விற்பன்னா்கள்.
Updated On :24 டிசம்பர் 2025, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் 31-ஆம் ஆண்டு மகா வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் ஆண்டுதோறும் உலக நன்மைக்காக மாா்கழி மாதத்தில் ருத்ர வேள்வி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி, 31-ஆம் ஆண்டு வேள்வி பூஜை மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமும் 150 வேத விற்பன்னா்கள் இதில் பங்கேற்று வேத மந்திரங்களை முழங்கி வேள்வி பூஜைகளை மேற்கொள்கின்றனா். வருகிற 28-ஆம் தேதி பகல் ஒரு மணிக்கு வஸோா்தாரா, மகா பூா்ணாஹுதி நடைபெறும்.