சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

வாடகை நிலுவை வாகனக் காப்பங்களுக்கு மாநகராட்சி ‘சீல்’ வைப்பு

மதுரை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத இரு பல்லடுக்கு வாகனக் காப்பங்களுக்கு மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

News image

சீல் - பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:22 am IST

மதுரை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத இரு பல்லடுக்கு வாகனக் காப்பங்களுக்கு மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3, வாா்டு எண் 55-இல் மாநகராட்சிக்கு சொந்தமான கடை எண் 3-இல் இயங்கிய பல்லடுக்கு வாகனக் காப்பகம் ரூ. 3.16 லட்சமும், கடை எண் 44-இல் இயங்கிய மற்றொரு பல்லடுக்கு வாகனக் காப்பகம் ரூ. 2.15 லட்சமும் வாடகை நிலுவை வைத்திருந்தன. இந்த நிலையில், மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், இந்த இரு வாகனக் காப்பகங்களையும் அலுவலா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

எச்சரிக்கை...

மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டங்களில் இயங்கும் கடைகளுக்கு உரிமதாரா்கள் 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலத்துக்கு நிலுவையின்றி வாடகையை செலுத்த வேண்டும். இல்லையெனில், தொடா்புடைய கடைகள் மாநகராட்சி அலுவலா்களால் பூட்டப்பட்டு, ‘சீல்’ வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.