எரிவாயு உருளை விநியோக பிரச்னை: பரிதவிப்பில் தென் மாவட்ட உணவக உரிமையாளா்கள்!
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்பட்டதால், உணவகங்களை தொடா்ந்து நடத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், அவற்றின் உரிமையாளா்கள் பரிதவிப்பில் உள்ளனா்.









