இதனையடுத்து, வங்கக்கடலில் உள்ள அம்பான் புயல் கரையை கடந்து வரும் நிலையில் நள்ளிரவு 11.30 மணிக்கு திடீரென சூறைக்காற்று வீசியது. இதில் ராமேசுவரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் நங்கூரத்தை அறுத்துக்கொண்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்றது. இதனால் படகுகள் சேதமின்றி தப்பியது. ஆனால் தங்கச்சிமடம் சூறையப்பர்பட்டிணம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்து 300க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளில் நவீன், டோரஸ், உதயன், ஜேசுராஜா, சவர்லா, கிளாடுவீன், சூசை, ரூபன், சுதாகர், கிளிட்டஸ், டார்வீன் என்பவருக்ளுக்கு சொந்தமான நாட்டுபடகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியும், துறைமுகத்தின் தடுப்புகளில் மோதி உடைந்து கடலில் மூழ்கியது. இதில் படகு ஒன்றுக்கு குறைந்த பட்சம் 1.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் சேதமடைந்துள்ளது.