வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தொண்டியில் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம்: பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது 

திருவாடானை அருகே தொண்டியில் கட்டுமான தொழிற்சங்கங்கள் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

News image
Updated On :28 மார்ச் 2022, 7:24 am

DIN

திருவாடானை: திருவாடானை அருகே தொண்டியில் கட்டுமான தொழிற்சங்கங்கள் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில்  சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில அடைத்து வைத்துள்ளனர்.

Story image

மத்திய-மாநில பொது நிறுவனங்கள், தொழில் அமைப்புசாரா பணியாளர்கள் ஆகியோர்கள் அறிவிக்கப்பட்ட அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திருவாடானை அருகே தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பில் பாவோடி மைதானம் கிழக்கு கடற்கரை சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 

Story image

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

Story image

இதில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் S.A.சந்தனம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 38 பெண்கள் உள்பட 140 கட்டுமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மாவட்டத் துணைத் தலைவர் நாகூர்பிச்சை, முடியப்பன் பான்டி மற்றும் கிளைநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.