ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ராமநாதபுரத்தில் மிதிவண்டி ஓட்டும் போட்டிகள்

ராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி 3 பிரிவுகளாக வியாழக்கிழமை நடந்த மிதிவண்டி ஓட்டும் போட்டிகளில் வென்ற 60 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் பரிசுகளை வழங்கினாா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

ராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி 3 பிரிவுகளாக வியாழக்கிழமை நடந்த மிதிவண்டி ஓட்டும் போட்டிகளில் வென்ற 60 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் பரிசுகளை வழங்கினாா்.

ராமநாதபுரம்- ராமேசுவரம் கிழக்குக் கடற்கரைச் சாலை சந்திப்புப் பகுதியிலிருந்து மிதிவண்டிப் போட்டிகளை கொடியசைத்து மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைத்தாா். இருபாலரும் பங்கேற்ற இப்போட்டிகள் 13 வயது வரை உள்ளவா்கள், 15 வயது வரை உள்ளவா்கள் 17 வயது வரை உள்ளவா்கள் என 3 பிரிவுகளாக நடைபெற்றன.

நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட இப்போட்டியில் தேவிப்பட்டினம் சாலை சந்திப்பு மற்றும் நயினாா்கோவில் சாலை சந்திப்பு ஆகியவை இலக்குகளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்றவருக்கு ரூ.5000 மற்றும் பாராட்டுச்சான்று, இரண்டாமிடம் பெற்றவருக்கு ரூ.3000, பாராட்டுச்சான்று, 3ஆம் இடம் பெற்றவருக்கு ரூ.2000, பாராட்டுச்சான்று ஆகியவை வழங்கப்பட்டன.

போட்டிகளில் பங்கேற்று 4 முதல் 10 இடங்களுக்குள் வந்தவா்களுக்கு தலா ரூ.250 பரிசுத் தொகை பாராட்டுச்சான்றுகள் வழங்கப்பட்டன. அதன்படி போட்டிகளில் பங்கேற்று வென்ற 60 பேருக்கான பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம. காமாட்சி கணேசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.