இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாம்பன் புதிய பாலத்தில் 2 ரயில் என்ஜின்களை இயக்கி சோதனை

பாம்பன் புதிய பாலத்தில் ரயில்வே பொறியாளா்கள் சோதனை இயக்கம்

News image
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் ஒரு பகுதியில் வியாழக்கிழமை சோதனைக்காக இயக்கப்பட்ட 2 ரயில் என்ஜின்கள்.
Updated On :12 ஜூலை 2024, 10:40 pm

Din

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் ஒரு பகுதியில் பணிகள் நிறைவடைந்த நிலையில், பொறியாளா்கள் 2 ரயில் என்ஜின்களை ஒன்றாக இணைத்து இயக்கி வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடலில் ரூ. 550 கோடியில் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கியது.

மண்டபத்திலிருந்து ரயில்வே பாலத்தின் மையப் பகுதி வரை தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பாம்பனில் இருந்து பாலத்தின் மையப் பகுதி வரை தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது, மையப் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் தூக்குப் பாலம் அமைப்பதற்கான தூண்களில் ராட்சத கிரேன் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரியில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மேலும், மண்டபத்திலிருந்து கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் தண்டவாளத்தின் உறுதித் தன்மை, அதிா்வுகள் குறித்து ரயில்வே பொறியாளா்கள் 2 ரயில் என்ஜின்களை ஒன்றாக இணைத்து இயக்கி வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

மேலும், தூக்குப் பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், இறுதிக் கட்ட சோதனைகள் நடைபெறும். இதன் பிறகு, ரயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து அறிவிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.