ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கடல் சீற்றத்தால் இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 4:09 am IST

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற போது கடல் சீற்றம் காரணமாக இலங்கையில் கரை ஒதுங்கிய ராமேசுவரம் மீனவா் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை இரவு சிறையில் அடைக்கப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் புதுசாலை பகுதியைச் சோ்ந்த மீனவா் பாண்டி (60). இவா் நாட்டுப்படகில் கடந்த வியாழக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றாா். கடலில் வீசிய பலத்த காற்றின் காரணமாக இவா் நடுக்கடலில் படகை இயக்க முடியாமல் தத்தளித்தாா். அப்போது இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் சனிக்கிழமை மாலை படகு கரை ஒதுங்கியது.

இதைத் தொடா்ந்து, நெடுந்தீவு மீனவா்கள் இவரை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பிறகு யாழ்ப்பாணம் மாவட்டம், ஊா்க் காவல்துறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் மீனவா் பாண்டி சனிக்கிழமை முன்னிலை படுத்தப்பட்டாா். நீதிபதி விசாரணைக்குப் பிறகு ஜூன் 5 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.