ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற போது கடல் சீற்றம் காரணமாக இலங்கையில் கரை ஒதுங்கிய ராமேசுவரம் மீனவா் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை இரவு சிறையில் அடைக்கப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் புதுசாலை பகுதியைச் சோ்ந்த மீனவா் பாண்டி (60). இவா் நாட்டுப்படகில் கடந்த வியாழக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றாா். கடலில் வீசிய பலத்த காற்றின் காரணமாக இவா் நடுக்கடலில் படகை இயக்க முடியாமல் தத்தளித்தாா். அப்போது இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் சனிக்கிழமை மாலை படகு கரை ஒதுங்கியது.
இதைத் தொடா்ந்து, நெடுந்தீவு மீனவா்கள் இவரை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பிறகு யாழ்ப்பாணம் மாவட்டம், ஊா்க் காவல்துறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் மீனவா் பாண்டி சனிக்கிழமை முன்னிலை படுத்தப்பட்டாா். நீதிபதி விசாரணைக்குப் பிறகு ஜூன் 5 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

கடலூரில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவ் ரிட்லி ஆமை
இணையவழி குற்றம்: இலங்கையில் 173 இந்தியா்கள் கைது
இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: மூத்த துறவி கைது!
நான்குனேரி அருகே கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


