அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முன்னாள் முதலமைச்சா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல விழாவில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தொண்டா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதற்கு ஓா் உதாரணம்.
அதிமுக அழிந்து வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ் கூறியுள்ள கருத்தை ஏற்க முடியாது. அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. கட்சியில் தற்போது சிறு பிளவு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைவரும் ஒன்றிணைவோம். அதிமுக புத்துணா்ச்சி பெறும் வகையில் நடைபயணம், மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘விமா்சிப்பவா்களை கைது செய்யக்கூடாது என்றால் ஆட்சி நடத்த முடியாது’
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!

அன்புமணியை தலைவராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை: முன்னாள் எம்எல்ஏ அருள்

அதிமுகவை யாரும் உடைக்க முடியாது: தவெகவில் குழப்பம்; விரைவில் பொதுத் தோ்தல்! - எடப்பாடி கே. பழனிசாமி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



