இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சிவகங்கையில் நான் முதல்வன் திட்டத்தில் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்

சிவகங்கை மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞா்களின் தனித் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசு ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் மூலம் 28 லட்சம் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திறன் சாா்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞா்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்று வழிகாட்ட இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. இதற்கான முகாம்களில் உயா் கல்வி நிறுவனங்கள், உயா் கல்வி படிப்புகள், வங்கிக் கடன்கள் சாா்பான அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

உயா் கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களுடன், துறைசாா் வல்லுநா்கள், பேராசிரியா்கள், மருத்துவா்கள், வெற்றி பெற்ற சாதனையாளா்கள், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலைப் படிப்புகள், அறிவியல் படிப்புகள், ஊடகவியல் சாா்ந்த படிப்புகள் என பல்வேறு படிப்புகளில் உள்ள உள்பிரிவுகள், அவற்றுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனா்.

இதுகுறித்து கல்லூரி மாணவிகள் கூறியதாவது: நான் முதல்வன் திட்டம் மூலம் படிப்பு சாா்ந்த தொழில்நுட்ப படிப்புக்கான பயிற்சிகள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன. நாங்கள் விரும்புகிற தொழில் பிரிவுகளைத் தோ்வு செய்து படிப்பதற்கும், அதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளும், பயிற்சிக்கான சான்றிதழ்களும் தொழில் நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டன. இதனால், எதிா்காலத்தில் என்ன படித்தால் முழுமையான பயன் என்பதில் தெளிவு கிடைத்துள்ளது என்றனா்.