தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மு.சூரக்குடி மஞ்சுவிரட்டில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

News image
சுகரீஷ்.
Updated On :5 ஜனவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மு.சூரக்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சுகரீஷ் (19) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள மு.சூரக்குடியில் கோயில் திருவிழாவையொட்டி கடந்த 2-ஆம் தேதி இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 25 போ் காயமடைந்தனா்.

மஞ்சுவிரட்டில் பாா்வையாளராக நின்றுகொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செட்டியாகுல தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் சுகரீஷ் (19) காளை முட்டியதில் பலத்த காயமடைந்து, பொன்னமராவதியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எஸ்.விமங்கலம் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.