இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் கடும் பனிப் பொழிவு

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நிலவும் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது பனிக்காலம் தொடங்கியுள்ளது. மானாமதுரை,திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக வயதானவா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

சில நாள்களில் மாலைப் பொழுதிலும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பனிப் பொழிவு நீண்ட நேரம் நீடிப்பதால் பகலிலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் செல்கின்றன. வீதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுகிறது.