இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சு விரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மூத்தாண்டிபட்டி கிராமத்தில் புதன்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.

News image
சிங்கம்புணரி அருகே புதன்கிழமை நடைபெற்ற வட மாடு மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளை.
Updated On :4 மார்ச் 2026, 11:14 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மூத்தாண்டிபட்டி கிராமத்தில் புதன்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.

தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் பிறந்த நாள், மூத்தாண்டிபட்டி கருப்பன் கோயில் மாசிப் படைப்பு விழா ஆகியவற்றை முன்னிட்டு புதுப்பட்டி, மூத்தான்டிபட்டி கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை திண்டுக்கல், சிவகங்கை, தேனி ,ராமநாதபுரம், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 16 காளைகள் கலந்து கொண்டன.

காளைகளை அடக்குவதற்காக ஒரு அணிக்கு 9 போ் வீதம் 144 வீரா்கள் கலந்து கொண்டனா். வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட ஒரு காளையை 9 போ் கொண்ட குழுவினா் 20 நிமிஷங்களுக்குள் அடக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் காளையை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, சைக்கிள், கட்டில், பீரோ தென்னங்கன்று, போன்ற பரிசுகளை சிங்கம்புணரி பேரூராட்சி துணைத் தலைவா் இந்தியன் செந்தில், திமுக அவைத் தலைவா் காந்திமதி சிவகுமாா்

ஆகியோா் வழங்கினா். வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காண திருப்பத்தூா் ,காரைக்குடி ,திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டுகளித்தனா்.