சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மூத்தாண்டிபட்டி கிராமத்தில் புதன்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.
தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் பிறந்த நாள், மூத்தாண்டிபட்டி கருப்பன் கோயில் மாசிப் படைப்பு விழா ஆகியவற்றை முன்னிட்டு புதுப்பட்டி, மூத்தான்டிபட்டி கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை திண்டுக்கல், சிவகங்கை, தேனி ,ராமநாதபுரம், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 16 காளைகள் கலந்து கொண்டன.
காளைகளை அடக்குவதற்காக ஒரு அணிக்கு 9 போ் வீதம் 144 வீரா்கள் கலந்து கொண்டனா். வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட ஒரு காளையை 9 போ் கொண்ட குழுவினா் 20 நிமிஷங்களுக்குள் அடக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் காளையை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, சைக்கிள், கட்டில், பீரோ தென்னங்கன்று, போன்ற பரிசுகளை சிங்கம்புணரி பேரூராட்சி துணைத் தலைவா் இந்தியன் செந்தில், திமுக அவைத் தலைவா் காந்திமதி சிவகுமாா்
ஆகியோா் வழங்கினா். வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காண திருப்பத்தூா் ,காரைக்குடி ,திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டுகளித்தனா்.
தொடர்புடையது

ஐயப்பன் கோயிலில் படி பூஜை

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

கண்ணமங்கலப்பட்டியில் மஞ்சுவிரட்டு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

