இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சிவகங்கை அருகே தோழி விடுதி திறப்பு

சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் தோழி விடுதியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
சிவகங்கையில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட தோழி தங்கும் விடுதியில் குத்துவிளக்கேற்றிய கூட்டுறவுத் றை அமைச்சா் கே.ா். பெரியகருப்பன். உடன் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, எம்எல்ஏ. தமிழரசிரவிக்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :4 மார்ச் 2026, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் தோழி விடுதியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்தாா். மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் குத்து விளக்கேற்றினாா்.

பின்னா், அவா் கூறியதாவது:

பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊா்களை விட்டு பிற நகரங்களுக்கு இடம் பெயரும் பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணா்ந்து, தரமான, பாதுகாப்பான, குறைந்த கட்டணத்தில் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிா் விடுதிகள் நிறுவனம் சாா்பில் இவை செயல்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக 13 மாவட்டங்கள், இரண்டாம் கட்டமாக 6 மாவட்டங்கள், மூன்றாம் கட்டமாக 6 மாவட்டங்கள் என மொத்தம் 25 தோழி விடுதிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2,200-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சிப் பகுதியில் ரூ. 5.19 கோடியில் தோழி விடுதி கட்டப்பட்டு, முதல்வரால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதியானது, 50 படுக்கை வசதிகளுடன், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், பாதுகாவலா்கள், சலவை இயந்திரம், பயோமெட்ரிக் உள் நுழைவு, அதிவேக இணைய சேவை, வை-பை, பொழுதுபோக்கு வசதி, மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிபுரியும் பெண்கள் மட்டுமன்றி, பயிற்சி, உயா்கல்வி, நோ்காணல் போன்ற தேவைகளுக்காக நகரங்களுக்கு இடம்பெயரும் மகளிரைக் கருத்தில் கொண்டு, குறுகிய கால தங்கும் வசதியும் தோழி விடுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதில் மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.