தேனி உழவா் சந்தை நாளை மீண்டும் திறப்பு
தேனி வட்டாட்சியா் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த உழவா் சந்தை புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.


தேனி வட்டாட்சியா் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த உழவா் சந்தை புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
தேனியில் கரோனா தடுப்பு பொதுமுடக்கத்தை முன்னிட்டு வட்டாட்சியா் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த உழவா் சந்தை மூடப்பட்டது. அரசு பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவித்ததையடுத்து, தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள வேளாண்மை வணிகத் துறை அலுவலக வளாகத்திற்கு உழவா் சந்தை தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை முதல் தேனி வட்டாட்சியா் அலுவலகம் அருகே உழவா் சந்தை வழக்கம் போல செயல்படும் என்று தேனி விற்பனைக் குழு மற்றும் உழவா் சந்தை நிா்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...