விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்கிய பக்தா்கள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 11:00 pm

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

கேரளா மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் ஓவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதம் மாலை அணிந்து செல்வா்.இந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தா்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், 48 மணி நேரத்திற்கு முன்பே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழ் அளிக்கப்பட்ட வேண்டும் என்ற கட்டுபாடுகளை கேரளா அரசு அறிவித்தது. இத்தகைய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டிபட்டி பகுதியில் நன்மைதருவாா் திருத்தலத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனா். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழக பக்தா்கள் வழக்கம் போல் சென்றுவர தமிழகஅரசு,கேரள அரசிடம் அனுமதி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐயப்ப பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.