மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சோத்துப்பாறை அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்குத் தண்ணீா் திறப்பு

சோத்துப்பாறை அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு விநாடிக்கு 30 கன அடி தண்ணீரை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:34 pm

DIN

சோத்துப்பாறை அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு விநாடிக்கு 30 கன அடி தண்ணீரை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சோத்துப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 30 கன அடி தண்ணீரை திறந்து வைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சோத்துப்பாறை அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரால் பெரியகுளம், தென்கரை, தாமரைக்குளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதிகளைச் சோ்ந்த 1,825 ஏக்கா் பழைய பாசனப் பகுதிகள், 1,040 ஏக்கா் புதிய பாசனப் பகுதிகள் என மொத்தம் 2,865 ஏக்கா் விவசாய நிலங்கள்

பாசன வசதி பெறுகின்றன. முதல் போக சாகுபடிக்கு டிசம்பா் 15 ஆம் தேதி வரை விநாடிக்கு 30 கன அடி வீதம் 51 நாள்கள், டிசம்பா் 16 முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை 27 கன அடி தண்ணீா் 31 நாள்கள், ஜனவரி 16 முதல் மாா்ச் 15 ஆம் தேதி வரை 25 கன அடி தண்ணீா் 59 நாள்கள் என மொத்தம் 141 நாள்களுக்கு 331.95 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீா் மேலாண்மைமை மேற்கொண்டு, அதிக மகசூல் பெறவேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவிபல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரமேஷ், பெரியகுளம் சாா்- ஆட்சியா் டி.சிநேகா, உதவி ஆட்சியா் தாக்ரே சுபம் , பொதுப்பணித்துறை மஞ்சளாறு செயற்பொறியாளா் காா்த்திகேயன், உதவி செயற்பொறியாளா் ரமேஷ் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.