இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இடுக்கி மாவட்டத்தில் கனமழை: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது

News image
Updated On :19 செப்டம்பர் 2020, 1:28 pm

DIN

தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 14 மாவட்டங்கள் உள்ளன. இதில் இடுக்கி  மாவட்டம் அருகே தேனி மாவட்டம் உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வட கிழக்கு பருவமழை எதிரொலியாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரெட்அலர்ட் விடுத்துள்ளது.

இதில் இரண்டு நாட்களிலும் பலத்த கனமழைக்கு எதிர்பார்க்கப்படுவதாகவும், குறைந்தபட்சம் 204 மில்லி மீட்டர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் பேரிடர் மேலாண்மைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர்.  

இரவு நேரங்களில், மலைச்சாலைகளில், தமிழக-கேரள எல்லை சாலைகளில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.