மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போடி அருகே இளைஞர் வெட்டிப் படுகொலை

போடி அருகே ஞாயிரன்று நள்ளிரவு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News image
ரவிக்குமார் (26).
Updated On :11 ஜனவரி 2021, 5:14 am

DIN

போடி அருகே ஞாயிரன்று நள்ளிரவு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், போடி அருகே கீழச்சொக்கநாதபுரம் நேருஜி காலனியைச் சேர்ந்தவர் ஒண்டிவீரன் மகன் ரவிக்குமார் (26). டிப்ளமோ படித்துவிட்டு பெங்களூருவில் வேலை செய்து வந்தார். கரோனா கராணமாக சொந்த ஊரில் தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

நள்ளிரவு வரை வராததால் இவரது தந்தை தேடிச் சென்றுள்ளார். அப்போது கீழச்சொக்கநாதபுரத்தையடுத்த சுந்தரராஜபுரத்திலிருந்து சில்லமரத்துப்பட்டி செல்லும் சாலையில் புளியமரத்தடி என்ற இடத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரவிக்குமார் இறந்து கிடந்துள்ளார். 

பின் தலை, வலதுபுற தோள்பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டியுள்ளனர். இடது ஆள்காட்டி விரலும் துண்டாக கிடந்துள்ளது. இதுகுறித்து ஒண்டிவீரன் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

போடி டி.எஸ்.பி. ஜி.பார்த்திபன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.