இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழக வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் தமிழக வனத் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை நக்சல் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
கைது செய்யப்பட்ட சோஜன்
Updated On :20 ஜூலை 2021, 7:13 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் தமிழக வனத் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை நக்சல் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லையில் தமிழக வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக தகவலின்பேரில் கம்பம் மேற்கு வனச்சரகத்தினர் கடந்த ஜுன் 30இல் ரோந்து சென்றனர்.

செல்லார் கோயில் மெட்டு வனப்பகுதியில் இரவு நேரத்தில் வெளிச்சம் தெரிவதைப் பார்த்த வனத்துறையினர் அங்கு சென்றனர். அங்கு 4  பேர்கள் கையில் கத்தி, அரிவாள், நாட்டு துப்பாக்கியுடன் நின்றனர்.

வனத்துறையினரை பார்த்ததும் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதில் தப்பிய வனத்துறையினர் அவர்களை நோக்கி தாக்கினர்.  இறுதியில் துப்பாக்கி, அரிவாள், கத்தி, வெடிமருந்து போன்றவைகளை போட்டு விட்டு அந்த கும்பல் கேரள எல்லைக்குள் தப்பி சென்றனர். 

இது தொடர்பாக கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் வனத்துறையினர் புகார் செய்தனர். புகாரின் பேரில் கூடலூர் தெற்கு காவல் நிலைய காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். கேரளத்திற்குள் தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதற்கிடையில், தேனி மாவட்ட நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு காவலர்கள் வனப்பகுதியில் ரோந்து சென்று வனத்துறையினரை துப்பாக்கியால் சுட்ட கும்பலில் இருந்து ஒரு இளைஞரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் இடுக்கி மாவட்டம் முருக்கடி அருகே உள்ள குழிப்பாலையைச் ஜோசப் மகன் சோஜன்(34) என்று தெரியவந்தது, மேலும் தப்பி ஓடிய 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.