கனமழையால் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி பகுதியில் மழை பெய்ததால் நீர்வரத்து 18 நாட்களுக்கு பிறகு அதிகரித்துள்ளது.


தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி பகுதியில் மழை பெய்ததால் நீர்வரத்து 18 நாட்களுக்கு பிறகு அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுருளி அருவியில் கடந்த ஏப்.15 ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதிக நீர்வரத்து வந்தது. அதன் பிறகு சிறிது சிறிதாக நீர்வரத்து குறையத் தொடங்கியது.
இந்நிலைய்ல் தற்போது காற்றழுத்தம் உருவானதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தால் சுருளி அருவியில் நீர்வரத்து சுமார் 18 நாட்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ளது.
தற்போது கரோனா 2 ஆவது அலை ஊரடங்கு காரணமாக, அருவி மற்றும் வளாகப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வரத்தடை உள்ளது. மேலும் தொடர்மழை அறிவிப்பு காரணமாக மேகமலை வன உயிரின சரணாலய ஊழியர்கள் அருவியின் நீர்வரத்தை கண்காணித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...