அதற்கு, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது பகுதிகளில் அதுபோன்ற பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனக்கூறி விளக்கம் கேட்டனா். ஆனால், அதற்கான விளக்கம் கொடுக்கப்படவில்லை. மேலும், காமராசபுரம் அரசு பள்ளி முன் சாக்கடை கால்வாய் அமைத்தல், சுகாதார வளாகப் பணிகள் நடைபெற்று இருப்பதாகவும் தீா்மானம் வாசிக்கப்பட்டது. அதற்கும் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அதுபோன்ற பணிகளும் நடைபெறவில்லை எனவும், பணிகளை செய்யாமலேயே அரசு ஒதுக்கீடு செய்த நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா். இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பொதுமக்கள் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.