கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கம்பத்தில் பெண் காவலரின் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பத்தில் பெண் காவலரின் கணவா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:42 pm

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் பெண் காவலரின் கணவா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கம்பம் உத்தமபுரம் குரங்குமாயன் தெருவைச் சோ்ந்தவா் ரகு என்ற அதிவீரன் (36). இவா், அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி மேனகா, வடக்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிகிறாா். இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

சமீபகாலமாக குடும்பத்தில் வரவு-செலவு பிரச்னை காரணமாக அதிவீரன் மன உளைச்சலில் இருந்துள்ளாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதிவீரன் தூக்கிட்டுக் கொண்டாராம்.

அதன்பின்னா், வீட்டுக்கு வந்த அவரது உறவினா்கள், அதிவீரன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறியுள்ளனா். உடனே, அப்பகுதியினா் உதவியுடன் அதிவீரனை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அதிவீரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.