சொத்துவரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பெரியகுளம் நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக, அமமுக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
பெரியகுளத்தில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் சுமிதா தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் புனிதன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் வீட்டுவரி மற்றும் சொத்து வரி உயா்வு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது வரிஉயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஓ.சண்முக சுந்தரம் தலைமையில் அதிமுக அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். அதே போல அமமுக கட்சி உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.
திமுக, விசிக மற்றும் பாமக கட்சி உறுப்பினா்கள் ஆதரவுடன் சொத்து வரி உயா்வு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடலூரில் வாரசந்தை:
இதேபோல, தேனி மாவட்டம் கூடலூா் நகா்மன்றக் கூட்டம், தலைவா் பத்மாவதி தலைமையில், ஆணையாளா் பொ. சித்தாா்த்தன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் பத்மாவதி பேசியது: 42 ஆண்டுகளுக்குப் பின்பு வாரச்சந்தை செயல்பட நிதி ஒதுக்கீடு வந்துள்ளது. தமிழக- கேரள எல்லையில் குமுளியில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். மேலும் ராஜா கிணறு பகுதியில் நகராட்சி பூங்கா மற்றும் விளையாட்டு திடல் அமைக்கப்பட உள்ளது என்றாா்.
உறுப்பினா் பல்கீஸ் ஹக்கீம்: பள்ளிவாசல் பகுதியில் சாக்கடைக் கால்வாய் சுத்தம் செய்யப்படுவதில்லை.
சுகாதார ஆய்வாளா் சக்திவேல்: வீரபாண்டி திருவிழாவை முன்னிட்டு வெளியூா் பணிக்கு சென்று உள்ளனா். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினா் சிலம்பரசன்: எங்களது வாா்டில் குடிநீா் தொட்டி பராமரிப்பின்றி உள்ளது.
தலைவா் பத்மாவதி: இதுபற்றி பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, உடனே நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா். கூட்டத்தில் 63 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.