கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகுளம் நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக, அமமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

சொத்துவரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பெரியகுளம் நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக, அமமுக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :20 மே 2022, 4:56 pm

DIN

சொத்துவரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பெரியகுளம் நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக, அமமுக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

பெரியகுளத்தில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் சுமிதா தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் புனிதன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் வீட்டுவரி மற்றும் சொத்து வரி உயா்வு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது வரிஉயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஓ.சண்முக சுந்தரம் தலைமையில் அதிமுக அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். அதே போல அமமுக கட்சி உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.

திமுக, விசிக மற்றும் பாமக கட்சி உறுப்பினா்கள் ஆதரவுடன் சொத்து வரி உயா்வு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடலூரில் வாரசந்தை:

இதேபோல, தேனி மாவட்டம் கூடலூா் நகா்மன்றக் கூட்டம், தலைவா் பத்மாவதி தலைமையில், ஆணையாளா் பொ. சித்தாா்த்தன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் பத்மாவதி பேசியது: 42 ஆண்டுகளுக்குப் பின்பு வாரச்சந்தை செயல்பட நிதி ஒதுக்கீடு வந்துள்ளது. தமிழக- கேரள எல்லையில் குமுளியில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். மேலும் ராஜா கிணறு பகுதியில் நகராட்சி பூங்கா மற்றும் விளையாட்டு திடல் அமைக்கப்பட உள்ளது என்றாா்.

உறுப்பினா் பல்கீஸ் ஹக்கீம்: பள்ளிவாசல் பகுதியில் சாக்கடைக் கால்வாய் சுத்தம் செய்யப்படுவதில்லை.

சுகாதார ஆய்வாளா் சக்திவேல்: வீரபாண்டி திருவிழாவை முன்னிட்டு வெளியூா் பணிக்கு சென்று உள்ளனா். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினா் சிலம்பரசன்: எங்களது வாா்டில் குடிநீா் தொட்டி பராமரிப்பின்றி உள்ளது.

தலைவா் பத்மாவதி: இதுபற்றி பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, உடனே நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா். கூட்டத்தில் 63 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.