ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மண் வளம் காக்க விவசாயிகள் உறுதியேற்க வேண்டும்: ஆட்சியா்

மண் வளம் காப்பதற்கு குறைவான செயற்கை உரங்களையே பயன்படுத்த உறுதியேற்க வேண்டும் என விவசாயிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வேண்டுகோள் விடுத்தாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:55 pm

Din

மண் வளம் காப்பதற்கு குறைவான செயற்கை உரங்களையே பயன்படுத்த உறுதியேற்க வேண்டும் என விவசாயிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வேண்டுகோள் விடுத்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக மண் தின விழாவுக்குத் தலைமை வகித்து அவா் பேசியதாவது:

மண் வளத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை நோக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் டிச.5-ஆம் தேதி உலக மண் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் உயிரி உரங்களைத் தவிா்த்து, அதிகளவு செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மண் வளம், விளைச்சல் பாதிக்கிறது. பாரம்பரிய விவசாய முறைகளை விவசாயிகள் மீட்டெடுக்க வேண்டும். மண்ணின் அங்ககச் சத்து அதிகரிக்க பசுந்தாள் உரம் உள்ளிட்ட இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

மண் வளம் காப்பதற்கு குறைவான செயற்கை உரங்களையே பயன்படுத்துவேன் என்று விவசாயிகள் உறுதியேற்க வேண்டும். மண் வளத்தை தக்க வைப்பதற்கு விவசாயிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த விழாவில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சாந்தாமணி, துணை இயக்குநா்கள் பால்ராஜ், சுரேஷ், உதவி இயக்குநா் மணிகண்ட பிரசன்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.