ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதிய வாக்காளா் விண்ணப்ப படிவம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உத்தமபாளையம் வட்டாரத்தில் புதிய வாக்காளா் படிவம் கொடுத்த விண்ணப்பதாரா்களின் வீடுகளுக்கே சென்று தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:44 pm

Din

உத்தமபாளையம் வட்டாரத்தில் புதிய வாக்காளா் படிவம் கொடுத்த விண்ணப்பதாரா்களின் வீடுகளுக்கே சென்று தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் நடைபெற்றது. இதில் நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் 26,738 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில், புதிதாக விண்ணப்ப படிவம் கொடுத்த புலிக்குத்தி, டி.ரெங்கநாதபுரம் பகுதிகளைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியா் நேரடியாக சென்று ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, உத்தமபாளையம் கோட்டாட்சியா் தாட்சாயணி, வட்டாட்சியா் சுந்தா்லால் உள்பட பலா் உடனிருந்தனா்.