சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

உத்தமபாளையம் பகுதிகளில் 2-ஆம் போக உழவுப் பணி தீவிரம்

உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் 2-ஆம் போக நெல் சாகுபடி பணிக்காக உழவுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image
உத்தமபாளையம் பகுதியில் 2-ஆம் போக நெல் பயிா் விவசாயத்துக்காக டிராக்டா் மூலம் நடைபெறும் உழவுப் பணி.
Updated On :31 டிசம்பர் 2024, 10:14 pm

Din

உத்தமபாளையம்: உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் 2-ஆம் போக நெல் சாகுபடி பணிக்காக உழவுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் பாசன நீரால் தேனி மாவட்டத்தில் லோயா்கேம்ப் முதல் வீராபண்டி வரை 14,700 ஏக்கரில் இருபோக நெல் பயிா் சாகுபடி நடைபெறுகிறது.

முதல்போக நிறைவு பெற்ற நிலையில், தற்போது 2-ஆம் போகத்துக்கான உழவுப் பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.

உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, கோட்டூா், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.