விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுவன் ஓட்டிய பைக் மோதி சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் காயம்

சிறுவன் ஓட்டிய பைக் மோதி சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் காயம்

News image
Updated On :17 ஜூன் 2024, 6:30 pm

Din

போடி: போடியில் சிறுவன் ஓட்டிய இரு சக்கர வாகனம் மோதியதில் சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து சிறுவன் மீதும், வாகன உரிமையாளா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போடி நகா், போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் செல்வராஜ். தலைமைக் காவலராக இருப்பவா் ராஜ்குமாா். ராஜ்குமாரின் இரு சக்கர வாகனத்தில் போடி மேலத்தெரு காவல்காரன் பொட்டல் நான்குமுனைச் சந்திப்பு அருகே சென்றனா். ராஜ்குமாா் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா். வாகனத்தின் பின்னால் சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜ் அமா்ந்து சென்றாா்.

அப்போது, சாலை சந்திப்பில் மற்றொரு இரு சக்கர வாகனம் இவரது வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தலைமைக் காவலா் ராஜ்குமாரும், சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜூம் பலத்த காயமடைந்தனா். இருவரும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து சிறுவன் தேனி ஜவஹா் நகரை சோ்ந்த சக்திவேல் மகன் பிரசாத் (17) மீதும், இரு சக்கர வாகன உரிமையாளா் கிருஷ்ணம்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ரவிக்குமாா் (37) மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.